அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பாகிஸ்தான்: விளையாடும்போது கையெறி குண்டு வெடித்து 2 சிறுவர்கள் பலி

பாகிஸ்தானில் விளையாடும்போது கையெறி குண்டு வெடித்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
பாகிஸ்தான்: விளையாடும்போது கையெறி குண்டு வெடித்து 2 சிறுவர்கள் பலி
Updated On :6 ஜனவரி 2021, 11:42 am

DIN

 பெஷாவர்: பாகிஸ்தானில் விளையாடும்போது கையெறி குண்டு வெடித்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய அப்பகுதி காவல்துறை அதிகாரி ரியாஸ் அகமது, பாகிஸ்தானின் வடகிழக்கு பெஷாவரில் சிறுவர்கள் விளையாடும்போது கையெறி குண்டுகளை கண்டறிந்துள்ளனர். 

அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று விளையாடும்போது தவறுதலாக குண்டு வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

கைபர் கணவாய் மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியையொட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.