பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் திறப்பு
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாகிஸ்தானில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஜனவரி 18 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாகிஸ்தானில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஜனவரி 18 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப மீண்டும் கல்வி நிலையங்களைத் திறப்பதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தானில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஜனவரி 18ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த கல்வி நிலையங்கள் தொற்று பாதிப்பு காரணமாக நவம்பர் 26 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தற்போது 5 லட்சத்து 14 ஆயிரத்து 338 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...