47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரான் அரசியல் தலைவரின் பெயரில் மிரட்டல் விடுத்த போலி டிவிட்டர் கணக்கு முடக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஈரான் அரசின் மூத்தத் தலைவர் அலி கமேனி பெயரில் கருத்துப் பதிவிட்ட சுட்டுரைக் கணக்கை அந்நிறுவனம் தடை செய்துள்ளது.

News image
ஈரான் அரசியல் தலைவரின் பெயரில் மிரட்டல் விடுத்த போலி டிவிட்டர் முடக்கம்
Updated On :22 ஜனவரி 2021, 4:17 pm

DIN

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஈரான் அரசின் மூத்தத் தலைவர் அலி கமேனி பெயரில் கருத்துப் பதிவிட்ட சுட்டுரைக் கணக்கை அந்நிறுவனம் தடை செய்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி சுலைமானி அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன்காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஒத்த கோல்ப் விளையாட்டு வீரரின் படத்தைப் பதிவிட்டு ‘பழிவாங்குவது உறுதி’ ஈரானின் மூத்தத் தலைவர் அலி கமேனி  பெயரிலான சுட்டுரைக் கணக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த பதிவின் மீது விசாரணை மேற்கொண்ட சுட்டுரை நிறுவனம் குறிப்பிட்ட அந்த சுட்டுரைக் கணக்கு அலி கமேனி பெயரில் போலியாக இயங்கி வருவது தெரிய வந்தthu. இதனைத் தொடர்ந்து அந்தக் கணக்கை சுட்டுரை நிறுவனம் தடை செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.