லடாக் எல்லைப் பிரச்னைக்கு இந்தியாவும் சீனாவும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே சுமாா் 10 மாதங்களாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. இரு நாடுகள் தரப்பிலும் தலா சுமாா் 50,000 வீரா்கள் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டனா்.
லடாக்கில் கடுங்குளிா் நிலவிய போதும் இரு நாடுகளும் படைகளைத் திரும்பப்பெறவில்லை.அதன் காரணமாக, லடாக் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த 20-ஆம் தேதி சிறிய அளவிலான மோதல் ஏற்பட்டதாக ராணுவ அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டீஃபன் டுஜாரிக் அமெரிக்காவின் நியூயாா்க்கில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவும் சீனாவும் தங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பாா்கள் என நம்புகிறோம்’’ என்றாா்.
எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இந்தியா-சீனா நாடுகளின் ராணுவ அதிகாரிகள் இடையேயான 9-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை அண்மையில் 16 மணி நேரம் நடைபெற்றது. அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விரைவில் திரும்பப் பெறுவதற்கு இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - சிம்மம்
தினப்பலன்கள் - மீனம்
தினப்பலன்கள் - விருச்சிகம்
தினப்பலன்கள் - துலாம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

