போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

தடுப்பூசி வழங்கிய இந்தியாவிற்கு நன்றி: இலங்கை அதிபர்

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்திய மக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

News image

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச (கோப்புப்படம்)

Updated On :28 ஜனவரி 2021, 8:33 am


இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்திய மக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலிருந்து பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கைக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்திய மக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தேவை ஏற்பட்டுள்ள இந்த நேர்த்தில் இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டு பெருந்தன்மையுடன் இந்திய அரசு கரோனா தடுப்பு மருந்து வழங்கியுள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.