வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 22 நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம்

கிழக்கு தைவானில் புதன்கிழமை ஏற்பட்ட அடுத்தடுத்த 22 நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News image
தைவானில் அடுத்தடுத்த ஏற்பட்ட 22 நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம்
Updated On :14 ஜூலை 2021, 4:03 pm

DIN

கிழக்கு தைவானில் புதன்கிழமை ஏற்பட்ட அடுத்தடுத்த 22 நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூலியன் கவுண்டி நகரத்தில் புதன்கிழமை தொடர்ச்சியாக 2 மணி நேரங்களுக்கு நிலநடுக்கங்கள் பதிவாகின. காலை 6.52 மணிக்கு தொடங்கிய நிலநடுக்கம் நகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்ததடுத்து ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவான முதல் நிலநடுக்கம் இதர பகுதிகளில் 3 முதல் 5 ரிக்டர் அளவுகளில் பதிவானது. தொடர்ச்சியான 22 நிலநடுக்ககங்களால் அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். 

எனினும் இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் இதே பகுதியில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.