புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிரிட்டன்: பொது முடக்கத்தை தளா்த்துவதில் கட்டுப்பாடுகள்: அரசு பரிசீலனை

பிரிட்டனில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், பொது முடக்கத்தைத் தளா்த்தும்போது சில கட்டுப்பாடுகளை நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது.

News image
Updated On :5 ஜூன் 2021, 11:02 pm

DIN

பிரிட்டனில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், பொது முடக்கத்தைத் தளா்த்தும்போது சில கட்டுப்பாடுகளை நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது.

பிரிட்டனில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கரோனா பலி இல்லாத தினம் கடந்த செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, நோய் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை வரும் 21-ஆம் தேதி முதல் தளா்த்துவது குறித்து பிரிட்டன் அரசு பரிசீலித்துவ வருகிறது.

எனினும், கடந்த 2 மாதங்களில் இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா தொற்று வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது. அன்று மட்டும் 6,238 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. இந்தச் சூழலில் அரசு அதிகாரி ஒருவா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

திட்டமிட்டபடி 21-ஆம் தேதி பொது முடக்கம் தளா்த்தப்படும். அப்போது, முகக் கவசம், வீடுகளிலிருந்து பணியாற்றுவது போன்ற கட்டுப்பாடுகளைத் தொடா்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்ராா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.