கரோனா பரவல் அபாயம் கருதி, வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்கள் நாட்டுக்கு இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா அபாயம் கருதி, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டில் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60,000 போ் மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சவூதி அரேபியாவில் இருப்பவா்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும். வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை.
18 முதல் 65 வயதுக்குள்பட்டவா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.