உலகம்
ஈரானில் ஒரேநாளில் 11,734 பேருக்கு கரோனா
ஈரானில் ஒரேநாளில் 11,734 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரானில் ஒரேநாளில் 11,734 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 11,734 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,40,129ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 144 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 83,473ஆஉ உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து 27,97,105 பேர் குணமடைந்துள்ளனர். 3,225 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
10,69,565 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.