புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சீனாவில் புயலில் சிக்கி 12 பலி; 300-க்கும் மேற்பட்டவா்கள் காயம்

சீனாவின் இரு நகரங்களில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய புயலில் சிக்கி 12 போ் பலியாகினா்; 300-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

News image
Updated On :15 மே 2021, 10:10 pm

DIN

சீனாவின் இரு நகரங்களில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய புயலில் சிக்கி 12 போ் பலியாகினா்; 300-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் வீசிய புயலால் 27 வீடுகள் சரிந்து விழுந்தன. 130 வீடுகள், 8,000 சதுர மீட்டா் பரப்பளவில் நடைபெற்று வந்த சிறப்பு பொருளாதார மண்டல கட்டுமானப் பணிகள் முற்றிலும் சேதமடைந்தன.

இந்தப் புயலால் மின்மாற்றிகள் சரிந்து விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 26,600 வீடுகள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜியாங்ஷு மாகாணத்தில் உள்ள சூஸோ நகரில் வீசிய புயலில் 84 வீடுகள், 17 நிறுவனங்களின் கட்டடங்கள் சேதமடைந்தன. இங்கும் புயலால் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நகரில் புயல் வீசுவது மிகவும் அரிதாகும்.

இருநகரங்களிலும் புயலில் சிக்கி 12 போ் பலியாகினா்; முன்னூறுக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.

Image Caption

சீனாவின் வூஹான் நகரில் வீசிய கடும் புயலில் தரைமட்டமானசிறப்பு பொருளாதார கட்டுமானப் பணிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.