விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாகிஸ்தான்-பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலி, 8 பேர் காயம்

பாகிஸ்தானின் சத்நோதி மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

News image

பாகிஸ்தான்-பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலி , 8 பேர் காயம்

Updated On :3 நவம்பர் 2021, 11:30 am

பாகிஸ்தானின் சத்நோதி மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் மாவட்டமான சத்நோதியில் 40 பயணிகளைக் ஏற்றிக்கொண்டு தெசில் பகுதியிலிருந்து பலூச் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திடிரென இயந்திரக் கோளாரு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து 500 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 22 பேர் பலியானதோடு 8 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பூஞ்ச்  துணை காவல்துறைத் தலைவர் ரஷித் நயிம் கான் , ‘ விபத்தில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள். காயமடைந்த 8 பேரில் 5 பேர் கொட்லி மாவட்டத்திற்கும் மீதம் இருப்பவர்கள் பலூச் மாவட்டத்திற்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக  கடந்த மாதம் பூஞ்ச் மற்றும் நீலும் மாவட்டத்தில் நடந்த விபத்துகளில் 4 மாணவர்கள் உயிரிழந்ததோடு 32 பேர் காயமடைந்திருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.