சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆபாசமான விடியோக்களை பதிவிட்டதாகக் கூறி தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியின் பயன்பாட்டுக்கான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது.
ஆபாசமான விடியோக்களை பதிவேற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் டிக்டாக் செயலியை பாகிஸ்தான் தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீதான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது. டிக்டாக் மீதான தடையை பாகிஸ்தான அரசு நீக்குவது இது நான்காவது முறையாகும்.
முன்னதாக ஒழுங்கீனமான மற்றும் அருவருக்கத்தக்க விடியோக்களை பதிவேற்றம் செய்து வெளியிட்ட புகாரின் அடிப்படையில் டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்திருந்தது.
இதையும் படிக்க | ஒடிசாவில் 50% இருக்கைகளுடன் திரையங்குகளைத் திறக்க அனுமதி
அதனைத் தொடர்ந்து 60 லட்சம் விடியோக்களை டிக்டாக் செயலி தனது தளத்திலிருந்து நீக்கியது. சீன நிறுவனமான டிக்டாக் செயலி பாகிஸ்தானில் 3.9 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.