ஈக்வடார்: சிறைக் கலவரத்தில் 300 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை சிறைக்கலவரத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈக்வடார்: சிறைக் கலவரத்தில் 300 பேர் பலி
ஈக்வடார்: சிறைக் கலவரத்தில் 300 பேர் பலி
Published on
Updated on
1 min read

மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை சிறைக்கலவரத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஈக்வடார் நாட்டில் பல்வேறு மோசமான குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்குள் மோதல் வெடிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

கொடிய ஆயுதங்களைக் கொண்டு நடக்கும் இந்தத் தாக்குதல்களில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 300 பேர்க்கு மேல் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்திருக்கிறது.

முக்கியமாக கடந்த செப்-30 அன்று  குயாக்வாலி சிறைச்சாலையில் நடந்த மோதலில் 116 கைதிகளும் கடந்த நவ.15 -ல் கயாமி சிறையில் 70 கைதிகளும் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com