கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மக்களிடம் மன்னிப்பு கோரினாா் ஆப்கன் முன்னாள் அதிபா் அஷ்ரஃப் கனி

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில், நாட்டைவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பிச் சென்ற்காக நாட்டு மக்களிடம் முன்னாள் அதிபா் அஷ்ரஃப் கனி புதன்கிழமை மன்னிப்பு கேட்டுக்கொண்டாா்.

News image

அஷ்ரப் கனி

Updated On :9 செப்டம்பர் 2021, 2:30 am

DIN

துபை: தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில், நாட்டைவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பிச் சென்ற்காக நாட்டு மக்களிடம் முன்னாள் அதிபா் அஷ்ரஃப் கனி புதன்கிழமை மன்னிப்பு கேட்டுக்கொண்டாா்.

ஆப்கானிஸ்தானின் 60 லட்சம் மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடனேயே, நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ாகவும் அவா் விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘காபூலைவிட்டுச் சென்றது எனது வாழ்நாளில் எடுத்த மிகவும் கடினமான முடிவாகும். நாட்டின் 60 லட்சம் மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன்தான் இந்த முடிவை எடுத்தேன். மேலும், நாட்டிலிருந்து எந்தவித பணத்தையும் திருடிச் செல்லவில்லை. நானும், எனது மனைவியும் எங்களின் சொந்த பணத்தையே பயன்படுத்தி வருகிறோம். எனது சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவித்திருக்கிறேன். இதை நிரூபிக்க ஐ.நா. தலைமையிலான நிதி புலனாய்வுக் குழு அல்லது எந்தவித குழுவின் ஆய்வுக்கும் அனுமதிக்கத் தயாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த நிலையில், அஷ்ரஃப் கனி தப்பிச் செல்ல உதவவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், ‘நாட்டைவிட்டு தப்பிச் செல்ல அஷ்ரஃப் கனிக்கு அமெரிக்கா உதவவில்லை. அவருடன் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டேன். அப்போது, தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றியது மற்றும் ஆட்சி மாற்றம் குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தினோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.