இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘காபூலைவிட்டுச் சென்றது எனது வாழ்நாளில் எடுத்த மிகவும் கடினமான முடிவாகும். நாட்டின் 60 லட்சம் மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன்தான் இந்த முடிவை எடுத்தேன். மேலும், நாட்டிலிருந்து எந்தவித பணத்தையும் திருடிச் செல்லவில்லை. நானும், எனது மனைவியும் எங்களின் சொந்த பணத்தையே பயன்படுத்தி வருகிறோம். எனது சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவித்திருக்கிறேன். இதை நிரூபிக்க ஐ.நா. தலைமையிலான நிதி புலனாய்வுக் குழு அல்லது எந்தவித குழுவின் ஆய்வுக்கும் அனுமதிக்கத் தயாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.