கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

போராட்டங்களுக்கு தடை விதித்த தலிபான்கள்

அரசின் முக்கிய பொறுப்புகள் தலிபான்களுக்கும் ஹக்கானி இயக்க தலைவர்களுக்கும் அளிக்கப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானில் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

தலிபான் படையினா் (கோப்புப் படம்)

Updated On :8 செப்டம்பர் 2021, 7:59 am

DIN

அமெரிக்க அரசை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஐநா அமைப்பால் தடை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகள் அடங்கிய புதிய அரசை தலிபான்கள் நேற்று (புதன்கிழமை) அமைத்தனர். 1990களில் தலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியில் மூத்த அமைச்சராக இருந்த முல்லா ஹசன் அகுண்ட் இடைக்கால பிரதமராக  அறிவிக்கப்பட்டுள்ளார். 

நாட்டின் பல்வேறு இனங்களை பிரதிபலிக்கும் வகையில் அனைவருக்குமான அரசு அமைக்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்திருந்தனர். ஆனால், முக்கிய பதவிகள் அனைத்தும் தலிபான்களுக்கும் பல்வேறு பயங்கரமான தாக்குதல்களை நடத்திய ஹக்கானி இயக்க தலைவர்களுக்கே அளிக்கப்பட்டுள்ளது. அரசில் பெண்களுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. 

இதுவரை வெளியில் வராத தலிபான் அமைப்பின் தலைவர் ஹசன் அகுண்ட் ஆட்சி அமைத்த பின்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இஸ்லாமிய மற்றும் ஷரியத் சட்டங்களை நிலைநாட்ட கடினமாக உழைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

பயங்கரவாதி அமைப்பாக இருந்த தலிபான்கள் அரசின் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து, ஆப்கானிஸ்தானில் அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துவருகின்றன. போராட்டங்களை ஆயுதங்கள் கொண்டு அடக்கிய பாதுகாப்பு அலுவலர்கள், மேற்கு பகுதியில் உள்ள ஹெராட் நகரில் இருவரை சுட்டு கொன்றனர். 

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலிபான்களின் செய்தித்தொடர்பாளர், "அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டு போராட்டங்கள் குறித்த சட்டங்கள் விளக்கப்படும் வரை யாரும் போராட்டம் நடத்தக்கூடாது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.