இந்தியா - ஆஸி. விமான சேவை மே 15 வரை ரத்து

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை மே 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸி. விமான சேவை மே 15 வரை ரத்து

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை மே 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தடை விதித்துள்ளார்.

இதற்கு முன்பு ஹாங்காங், ஈரான், துபை, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால், தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு பல மாநிலங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தைத் துண்டித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com