ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சமையலறையில் பதுக்கப்பட்ட ரெம்டெசிவிர்: மும்பையில் 5 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேவுள்ள பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தின் சமையலறையில் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து பதுக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2021, 6:16 am

DIN


மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேவுள்ள பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தின் சமையலறையில் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து பதுக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை அருகேவுள்ள கோரிகான் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் கரோனா தொற்றுக்கு வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து பதுக்கியிருப்பதாக மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு பரிசோதனை மேற்கொண்ட காவல்துறையினர் சமையலறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 26 ரெம்டெசிவிர் மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்தினை 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக 5 பேரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.