துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 17 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பகுதி அதிக மக்கள் தொகையை கொண்டிருப்பதால் இதுவரை 19 ஹெலிகாப்டர்கள் , 17 படகுகளுடன் 4,680 மீட்புப்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் மற்ற சில பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கட்டடங்கள், பாலங்கள் மற்றும் கார்கள் சேதாரமாகியிருக்கிறது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 1,400 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.