அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான டென்னசியில் உள்ள ஹம்பேரிஸ் நாட்டில் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) ஏற்பட்ட கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 21பேர் உயிரிழந்திருப்பதாகவும் ,20 பேர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 17 இன்ச் அளவில் கனமழை பதிவானதைத் தொடர்ந்து அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தொய்வான மீட்புப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | பஞ்சஷேர் மாகாணத்தையும் குறிவைக்கும் தலிபான்கள்!
இதற்கிடையில் வெள்ளப் பெருக்கில் சிக்கி 21பேர் பலியானார்கள் என்றும் 20 பேர் மாயமானார்கள் என்றும் அந்நாட்டின் காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
கடும் கனமழை காரணமாக ஹம்பேரிஸில் பள்ளிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அளித்ததோடு மக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.