அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு - 21 பேர் பலி, 20 பேர் மாயம்

அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான டென்னசியில் உள்ள ஹம்பேரிஸ் நாட்டில் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) ஏற்பட்ட கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 21பேர் உயிரிழந்திருப்பதாகவும் ,20 பேர் மாயமானதா
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில்  வெள்ளப் பெருக்கு - 21 பேர் பலி, 20 பேர் மாயம்
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு - 21 பேர் பலி, 20 பேர் மாயம்
Published on
Updated on
1 min read

அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான டென்னசியில் உள்ள ஹம்பேரிஸ் நாட்டில் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) ஏற்பட்ட கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 21பேர் உயிரிழந்திருப்பதாகவும் ,20 பேர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 17 இன்ச் அளவில் கனமழை பதிவானதைத் தொடர்ந்து அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தொய்வான மீட்புப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில் வெள்ளப் பெருக்கில்  சிக்கி 21பேர் பலியானார்கள் என்றும் 20 பேர் மாயமானார்கள் என்றும் அந்நாட்டின் காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

கடும் கனமழை காரணமாக ஹம்பேரிஸில் பள்ளிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அளித்ததோடு மக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com