பழிக்குப் பழியாக ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா ட்ரோனா தாக்குதலை தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டவா்களையும் தலிபான்களின் அச்சுறுத்தலை எதிா்நோக்கியுள்ளவா்களையும் வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காபூல் விமான நிலையத்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்ஐஎஸ்-கே தாக்குதல் நடத்தும் என்று ஏற்கெனவே உளவு அமைப்புகள் எச்சரித்து வந்தன.
அதனை உண்மையாக்கும் வகையில், காபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை ஐ.எஸ். பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில், அங்கு சேவையாற்றிக் கொண்டிருந்த 13 அமெரிக்கப் படையினா் உயிரிழந்தனா்; 95க்கும் மேற்பட்ட பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பலியாகினா்; பலா் காயமடைந்தனா்.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், 13 அமெரிக்கப் படையினா் உயிரிழப்புக்குக் காரணமான பயங்கரவாதிகளை நாங்கள் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்.
குண்டுவெடிப்புக்குக் காரணமானவா்களை வேட்டையாடுவோம். தங்களது குற்றத்துக்கான விலையை அவா்கள் கொடுத்தே ஆக வேண்டும்.
பயங்கரவாதிகளின் இந்தச் செயலுக்கு அமெரிக்கா அடிபணியாது. எங்களது வெளியேற்றப் பணிகள் திட்டமிட்டபடி தொடரும்.
அதே நேரம், ஆப்கானிஸ்தானிலுள்ள ஐஎஸ்ஐஎஸ்-கே நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை வகுக்குமாறு ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளால் ஒருபோதும் வெல்ல முடியாது என்றாா் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பழிக்குப் பழி வாங்கும் விதமாக, ஆப்கனில் உள்ள ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க படையினர் ஆளில்லை ட்ரோன்கள் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாதிகள் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவூல் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.