டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசியாவின் ஃப்ளோரெஸ் தீவுப் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக, சுனாமி அலைகள் எழும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
Updated On :28 ஜனவரி 2024, 5:41 am

PTI


ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஃப்ளோரெஸ் தீவுப் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக, சுனாமி அலைகள் எழும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தோனேசியாவில் ஃப்ளோரெஸ் தீவுப் பகுதியில் நேரிட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவாகியிருந்தது.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியில், 18.5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்தது. கிழக்கு நௌஸா டெங்கரா மாகாணத்தில் சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட மிகப்பெரிய தீவான மௌமரேவின்  நகரப்பகுதியிலிருந்து 112 கி.மீ. தொலைவில் வடக்கே இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. 

தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி இது பற்றி கூறுகையில், இப்பகுதியில் வசித்தவர்கள், நிலநடுக்கத்தைக் கடுமையாக உணர்ந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் செய்திகளில், மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததும், கட்டடங்களிலிருந்து ஏராளமான மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

எனினும், விரைவுப் படையினர், பாதிப்பு நிலவரங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.