
மலேசியாவில், செலாங்கோர் மாகாணத்தின் நெடுஞ்சாலையில், வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், 8 குழந்தைகள் உள்பட 10 பேலியாகினர்.
வெள்ளிக்கிழமை இரவு 11.40 மணிக்கு நேரிட்ட இந்த விபத்தில், மூன்று கார்கள், ஒரு லாரி ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 17 பேர் சிக்கியிருந்தனர். அவர்களில் 10 பேர் பலியாகிவிட்டனர். அவர்களில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் 8 குழந்தைகள் அடங்குவர். அவர்களில் 5 சிறுவர்கள், 3 பேர் சிறுமிகள் ஆவர்.
லாரியின் கீழ் சிக்கியிருந்த கார்களை அகற்றவும், வாகனங்களுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கவும், கிரேன் உதவியோடு, மீட்புப் படையினர் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.