பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு - 4 வது அலைக்கான எச்சரிக்கை

பாகிஸ்தானில் கடந்த மே 30 ஆம் தேதி முதல் தினசரி கரோனா பாதிக்கப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தானில் கடந்த மே 30 ஆம் தேதி முதல் தினசரி கரோனா பாதிப்பு விகிதம் 4.09 சதவிகிதமாக உள்ளதாக அந்நாட்டின் ஜியோ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் முழுவதும் 48,382 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1,980 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அன்றைய தினம் 27 பேர் கரோனாவினால் உயிரிழந்தனர். குறிப்பாக பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அதிக நபர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் கைபர் பக்துன்வா மாகாணம் உள்ளது. 

பாகிஸ்தானில் இதுவரை ஒட்டுமொத்தமாக 9,73,284 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22,582 கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது 37,499 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் வருகிற ஜூலை பிற்பகுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கரோனா 4வது அலை தாக்கும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com