ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரான்ஸ் கத்தோலிக்க மதத் தலங்களில் சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்: போப் பிரான்சிஸ் வருத்தம்

பிரான்ஸிலுள்ள கத்தோலிக்க மதத் தலங்களில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் தொடர்பாக போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

News image

பிரான்ஸ் கத்தோலிக்க மதத் தலங்களில் சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்: போப் பிரான்சிஸ் வருத்தம்

Updated On :6 அக்டோபர் 2021, 10:16 am

DIN

பிரான்ஸிலுள்ள கத்தோலிக்க மதத் தலங்களில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் தொடர்பாக போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸிலுள்ள கத்தோலிக்க மதத் தலங்களில் சிறுவா்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்று வருவதாகவும், அவை நீண்ட காலமாக மூடி மறைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, இந்தப் புகார்களை விரிவாக விசாரிப்பதற்கான குழுவை பிரான்ஸ் கத்தோலிக்க தலைமையகம் அமைத்தது. அந்தக் குழு, கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்க மையங்களில் சிறுவா்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றங்கள் குறித்த விவரங்களை கடந்த 2018-ஆம் ஆண்டு சேகரிக்கத் தொடங்கியது.

அந்தக் குழு தனது 2,500 பக்க விசாரணை அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், கடந்த 70 ஆண்டுகளில் சுமாா் 3.30 லட்சம் சிறுவா்கள் கத்தோலிக்க மையங்களில் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள போப் பிரான்சிஸ், “துரதிருஷ்டவசமாக, பெரும் எண்ணிக்கையில் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் அனுபவித்த காயத்திற்கு எனது வருத்தத்தையும் வலியையும் தெரிவிக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

“தேவாலயத்தின் இயலாமையால் நீண்ட காலமாக அவர்களை இந்தக் கொடுமையை அனுபவிக்கச் செய்தது அவமானகரமானது, எங்கள் அவமானம்” என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்த போப் பிரான்சிஸ் கத்தோலிக்க மதத் தலங்களில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.