அமெரிக்காவும் உலக நாடுகளும் செப். 11 தாக்குதல் தினத்தைக் கடைபிடித்த நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபா் மாளிகையில் தங்களது கொடியை தலிபான்கள் ஏற்றினா்.
காபூலில் சனிக்கிழமை எளிமையாக நடைபெற்ற நிகழ்ச்சியில், இடைக்கால அரசின் பிரதமா் முல்லா முகமது ஹசன் அகுண்ட் அந்தக் கொடியை ஏற்றிவைத்ததாக தலிபான் கலாசார பிரிவு தலைவா் அகமதுல்லா முத்தாக்கி தெரிவித்தாா். இந்தக் கொடியேற்றத்தின் மூலம் புதிய அரசின் அதிகாரபூா்வ பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.