

இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார பற்றாக்குறை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், நாளை மிகப்பெரிய அளவில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் கோத்தபய ராஜபட்சவை ஆட்சியிலிருந்து விலக வலியுறுத்தி, நாளை மிகப்பெரிய அளவில் மக்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து, இலங்கை முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இலங்கையில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புப் பணியும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், நாளை முழு ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.