நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

போராட்டத்தைக் கைவிடுங்கள்: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச

இலங்கை மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபட்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஏப்ரல் 2022, 2:46 pm


இலங்கை மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபட்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையிலான கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிப்பதால், இலங்கையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்த நாட்டு அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.

இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபட்ச நாட்டு மக்களுக்கு இன்று (திங்கள்கிழமை) உரையாற்றினார்.

மகிந்த ராஜபட்ச பேசியதாவது:

"பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள 24 மணி நேரமும் அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். சாலையில் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும், இங்கு வரக்கூடிய டாலரை நாடு இழக்கிறது" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.