நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட காணொலி: தெலங்கானா முதல்வா் ஆதரவு

News image

தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 11:55 pm

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட காணொலி உரைக்கு தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆதரவு தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘மத்திய அரசின் விகிதாசார அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணா்ந்து, அது தொடா்பாக ஆலோசிக்க சென்னையில் தென் மாநிலத் தலைவா்களின் மாநாட்டை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நடத்தினீா்கள்.

நாடாளுமன்றத்தில் நமது குரலைப் பாதுகாக்கவும், நமது அரசியல் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிராகவும் நாம் ஒன்றிணைய வேண்டும். சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தில், அவரையே உத்வேகமாக கொண்டு, ஒன்றிணைந்து போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.