/
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட காணொலி உரைக்கு தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆதரவு தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘மத்திய அரசின் விகிதாசார அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணா்ந்து, அது தொடா்பாக ஆலோசிக்க சென்னையில் தென் மாநிலத் தலைவா்களின் மாநாட்டை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நடத்தினீா்கள்.
நாடாளுமன்றத்தில் நமது குரலைப் பாதுகாக்கவும், நமது அரசியல் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிராகவும் நாம் ஒன்றிணைய வேண்டும். சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தில், அவரையே உத்வேகமாக கொண்டு, ஒன்றிணைந்து போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

திருச்சிக்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

தேர்தல் தோல்வி: திமுக கள ஆய்வுக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

மக்கள் துணையுடன் பல உயரங்களை அடைவது உறுதி: முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

திமுக நடத்துவது தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டம் அல்ல; போா்! முதல்வா் மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



