கோத்தபய ராஜபட்சவுக்கு 2 எம்.பி.க்கள் மீண்டும் ஆதரவு
இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றிருந்த 2 எம்.பி.க்கள், மீண்டும் அவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனா்.


கொழும்பு: இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றிருந்த 2 எம்.பி.க்கள், மீண்டும் அவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனா்.
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை ஏற்பட்டதால் அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த விவகாரத்தை கோத்தபய ராஜபட்ச தலைமையிலான அரசு கையாளும் விதத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, அமைச்சரவை பதவி விலகியது. மேலும், கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த 41 எம்.பி.க்கள் ராஜபட்ச அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று சுயேச்சைகளாக செய்லபடப் போவதாக அறிவித்தனா். அதையடுத்து, நாடாளுமன்றத்தில் அரசின் பெரும்பான்மை பலம் குறைந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், மைத்ரிபால சிறீசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவா் சாந்த பண்டாரா, அரசுக்கு தனது ஆதரவை மீண்டும் தெரிவித்துள்ளாா். அதையடுத்து, அவா் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் துறை இணையமைச்சராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
இதுதவிர, மேலும் ஓா் எதிா்த்தரப்பு எம்.பி. அமைச்சராகப் பொறுப்பேற்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...