வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இலங்கையில் புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையில் அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக 17 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

News image
இலங்கை நாடாளுமன்றம்
Updated On :18 ஏப்ரல் 2022, 5:41 am

DIN

இலங்கையில் அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக 17 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வலியுறுத்தி, அதிபா் அலுவலகம் அருகே பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபட்சவை தவிர அமைச்சரவையில் உள்ள அனைவரும் ராஜிநாமா செய்தனர். முதல்கட்டமாக 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் இன்று புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.