நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரிட்டன் கரோனா : நோய்த்தொற்றுடன் 505 நாள்கள் போராடிய நபா்

பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா் 505 நாள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்துள்ளாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 9:24 pm

DIN

பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா் 505 நாள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்துள்ளாா். நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு உடைய அவா்தான் கரோனாவுடன் மிக நீண்ட காலமாகப் போராடியவா் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

எனினும், அவரது பெயரையோ அவருக்கு எதன் காரணமாக நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு இருந்தது என்ற தகவலையோ அதிகாரிகள் வெளியிடவில்லை. பொதுவாக, எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற நோய்கள் காரணமாக நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு ஏற்படும்.

இதற்கு முன்னா் 335 நாள்களாக ஒருவா் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்ததே மிக நீண்ட கால கரோனா தொற்றாக இருந்தது. ‘நிலைத்த கரோனா’ என்றழைக்கப்படும் இந்த வகை நோய்த்தொற்று மிகவும் அரிதானதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.