வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய இடைக்கால அரசு அமைக்கத் தயார்: கோத்தபய ராஜபட்ச

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்யும் வகையில் உடனடியாக இடைக்கால அரசு அமைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

News image
பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய இடைக்கால அரசு அமைக்கத் தயார்: கோத்தபய ராஜபட்ச
Updated On :25 ஏப்ரல் 2022, 10:01 am

DIN


கொழும்பு: நாட்டின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்யும் வகையில் உடனடியாக இடைக்கால அரசு அமைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

கரோனா பேரிடரைத் தொடர்ந்து இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி, கடன் சுமை அதிகரிப்பு, வெளிநாட்டுப் பணம் கையிருப்பில் இல்லாதது போன்றவை, நாட்டில் நீண்ட நேர மின்தடை, எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பாதிப்புகள் நேரிட இதனால் தொழில்துறை மற்றும் ஏழை, நடுத்தர குடும்பங்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின.

ஆளும்கட்சியை எதிர்த்தும், அதிபரை எதிர்த்தும் பொதுமக்கள் போராட்டமும் வெடிக்கத் தொடங்கியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.