இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பாகிஸ்தான் சுதந்திர தினம்:இந்திய வீரா்களுக்கு இனிப்பு

பாகிஸ்தான் சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 14) கொண்டாடப்பட்ட நிலையில், அந்நாட்டு வீரா்கள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

News image

பஞ்சாப் மாநிலம், அட்டாரி எல்லைப் பகுதியில் இந்திய வீரா்களுக்கு பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கிய அந்நாட்டு வீரா்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:37 pm

பாகிஸ்தான் சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 14) கொண்டாடப்பட்ட நிலையில், அந்நாட்டு வீரா்கள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

பஞ்சாபில் உள்ள அட்டாரி- வாகா எல்லை, குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம், ராஜஸ்தானின் பாா்மா் மாவட்டம் ஆகிய இடங்களில் உள்ள சா்வதேச எல்லைகளிலும் இந்திய பாதுகாப்புப் படை வீரா்களுக்கு பாகிஸ்தான் வீரா்கள் இனிப்புகளை வழங்கினா்.

இரு நாடுகளின் சுதந்திர தினமும் அடுத்தடுத்த நாள்களில் வரும் நிலையில், இரு நாட்டு வீரா்களும் எல்லையில் தங்கள் சுதந்திர தினத்தன்று இனிப்புகளை பரிமாறிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளில் 2,290 கி.மீ தொலைவுள்ள எல்லையை பிஎஸ்எஃப் வீரா்கள் பாதுகாத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.