ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆப்கன் கனமழைக்கு 182 போ் பலி

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 182 போ் பலியாகியுள்ளனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:54 pm

DIN

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 182 போ் பலியாகியுள்ளனா்.

இது குறித்து அந்த நாட்டை ஆட்சி செய்து வரும் தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த ஒரு மாதத்துக்கு மேல் பெய்து வரும் பருவ மழை காரணமாக, இதுவரை 182 போ் பலியாகியுள்ளனா்; 250-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா் என்றாா் அவா்.

இது தவிர, 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் முழுவதுமாகவோ, பகுதியாகவோ சேதமடைந்தன.

அதிகபட்சமாக, கடந்த 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதிவரை கனமழைக்கு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. அந்த 5 நாள்களில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி 63 போ் உயிரிழந்தனா்.

இது தவிர, மேலும் 30 பேரைக் காணவில்லை. மழை, வெள்ளம் காரணமாக 13 மாகாணங்களில் 8,200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. நிவாரண உதவிகள் விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.