யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

“உக்ரைனில் அமைதி நிலவட்டும்”: கண்ணீர் விட்ட போப் பிரான்சிஸ்

ரஷியா உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் பிரான்சிஸ் அழுத சம்பவத்தின் காணொலி வெளியாகியுள்ளது. 

News image
போப் பிரான்சிஸ் (கோப்புப்படம்)
Updated On :10 டிசம்பர் 2022, 3:14 pm

DIN

ரஷியா உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் பிரான்சிஸ் அழுத சம்பவத்தின் காணொலி வெளியாகியுள்ளது. 

நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் அறிவிப்பு செய்தது. 200 தினங்களைக் கடந்து நடந்துவரும் இந்த போரில் இதுவரை இருதரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷியாவுடன் போரிட்டு இதுவரை 13 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் ரோமில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற போப் பிரான்சிஸ் இரு நாடுகளுக்குமிடையேயான போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி பேசினார். 

அப்போது உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என தெரிவித்த போப் பிரான்சிஸ் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அழுதார். இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்த போப் பிரான்சிஸ் உக்ரைன் மக்கள் அமைதியுடன் வாழ இறைவனிடம் வேண்டுவதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.