ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

பாகிஸ்தானில் எரிவாயு உருளை வெடித்தது: 12 பேர் பலி, 13 பேர் காயம்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:09 am

DIN

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். 

லாஸ்பேலாவின் துணை ஆணையர் முராத் கான் காசி கூறுகையில், 

கடை ஒன்றில் எரிவாயு நிரப்பும் போது இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. லாஸ்பேலாவின் பேலா பகுதியில் உள்ள கடைகளுக்கு தீ மளமளவெனப் பரவியது. 

25 பேர் தீக்காயங்களுடன் கராச்சியில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்த 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இந்த தீ விபத்தில் 12 வாகனங்கள் எரிந்து நாசமாகின. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.