ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து சாலை மூடப்பட்டுள்ளது.
ஜம்மு -காஷ்மீர் உதம்பூரில் உள்ள தேவால் பாலம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் யாரும் பயணிக்க வேண்டாம் என்று ஜம்மு-காஷ்மீர் போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது.
மாற்றாக, முகலாய சாலை, எஸ்.எஸ்.ஜி சாலை வழியாக போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க |ஜோ பைடனை இன்று சந்திக்கிறார் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி!