இந்தியாவின் நிதிநிலை அறிக்கையை பாராட்டி தள்ளிய சர்வதேச நிதியம்

இந்தியாவுக்கான சிந்தனை மிக்க கொள்கை திட்டத்தை நிதிநிலை அறிக்கையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை கலவையான விமரிசனங்களை பெற்றுவந்தன. மூலதன செலவு மற்றும் கதி சக்தி திட்டம் இந்தியாவில் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வழிவகுக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், இது முதலாளித்துவத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை என பொருளாதார ஆய்வறிஞர்கள் விமரிசித்தனர்.

இந்நிலையில், இந்தியாவின் நிதிநிலை அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள சர்வதேச நிதியம், இது சிந்தனை மிக்க கொள்கை திட்டம் எனக் கூறியுள்ளது.

இதுகுறித்து விரிவாக பேசிய சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, "மனித மூலதன முதலீடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் புதுமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவிற்கு மிகவும் வலுவான வளர்ச்சியை நாங்கள் கணித்து வருகிறோம். 

ஆம், 2022 ஆம் ஆண்டிற்கான எங்கள் முந்தைய கணிப்புக்கு எதிராக 9.5 சதவீதத்திலிருந்து 9 சதவீதத்திற்கு சிறிய தரமிறக்கம் உள்ளது. ஆனால், 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு சிறிய மேம்படுத்தலும் உள்ளது. ஏனெனில், நிலையான வளர்ச்சியைக் காண்போம் என்று நாங்கள் நினைக்கிறோம். 

கோவிட்-19 தொற்று காலத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள். அதேபோல, தொற்றுநோய் தொடர்ந்து இருந்தால், தெளிவான முன்னோக்கி வழிகாட்டுதலின் மூலம் விவேகமான முறையில் நிதி நிலைமைகளை இறுக்குவது உள்பட பல காரணிகளின் மீது நிபந்தனை விதிக்கப்படும். 

இதுவரை, நாம் பார்ப்பது என்னவென்றால், நிதி நிலைமைகளின் இறுக்கம் வளர்ந்து வரும் சந்தைகளுக்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறவில்லை. முந்தைய காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில், விகிதங்களின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இல்லை. 

ஏன்? வளர்ந்து வரும் சந்தைகளுக்கு இது போன்ற கடினமான சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதும் பலப்படுத்த வேலை செய்திருப்பதாலும், பணவீக்க அழுத்தங்களை எதிர்கொண்டவுடன் அவர்களில் பலர் விவேகமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாலும் பெரிய பிரச்னையாக மாறவில்லை.

இந்தியா குறுகிய காலப் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. நீண்ட கால கட்டமைப்பு மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இருப்பினும், மனித மூலதன முதலீடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் புதுமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், நாங்கள் மிகவும் சாதகமாக இருக்கிறோம். பொருளாதாரக் கருவிகளைப் பயன்படுத்தி பருவநிலை மாற்ற நிகழ்ச்சி நிரலை இந்தியா எவ்வாறு முடுக்கிவிடலாம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com