கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

'நானும் அமைச்சர்களும் கீவில்தான் இருக்கிறோம்' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த உக்ரைன் அதிபர்

நாங்கள் உக்ரைனில்தான் இருக்கிறோம்; எங்கும் தப்பிச் செல்லவில்லை என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:31 am

DIN

நாங்கள் உக்ரைனில்தான் இருக்கிறோம்; எங்கும் தப்பிச் செல்லவில்லை என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 3-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. ரஷிய தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. உதவி கேட்டும் உக்ரைனுடன் போரிட உலக நாடுகள் முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் நிலவரம் குறித்து அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், உக்ரைனில் இருந்து அதிபர் ஸெலென்ஸ்கி தப்பித்துவிட்டதாக வதந்தி பரவியது. இதற்கு பதில் அளித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அதிபர் ஸெலென்ஸ்கி விடியோவில், 'நான் உள்ளிட்ட அமைச்சர்கள், கட்சியின் தலைவர் உள்ளிட்ட அனைவரும் தலைநகர் கீவில் தான் இருக்கிறோம். எங்கள் மக்கள் இங்குதான் இருக்கிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக நாங்கள் ஒன்றிணைந்து போராடிக்கொண்டிருக்கிறோம். இது எங்களுடைய நாடு; நாங்கள் இங்குதான் இருப்போம்' என்று அதில் கூறியுள்ளார். 

மேலும் மற்றொரு விடியோவில், உக்ரைன் ராணுவத்தை சரணடைய தான் சொன்னதாக பரவிய செய்தியும் உண்மையில்லை என்றும் நாட்டுக்காக தொடர்ந்து போரிட்டு வருகிறோம்; ஆயுதங்களை கீழே போடமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.