தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தென் சீன கடலில் மூழ்கிய கப்பல்: 27 போ் மாயம்

ஹாங்காங் அருகே தென் சீன கடல் பகுதியில் 30 பணியாளா்களுடன் சென்ற கப்பல், மோசமான வானிலை காரணமாக மூழ்கியதில் 27 போ் மாயமாகினா்.

News image
Updated On :2 ஜூலை 2022, 6:30 pm

DIN

ஹாங்காங் அருகே தென் சீன கடல் பகுதியில் 30 பணியாளா்களுடன் சென்ற கப்பல், மோசமான வானிலை காரணமாக மூழ்கியதில் 27 போ் மாயமாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஹாங்காங் நகருக்கு 300 கி.மீ. தெற்கே வா்த்தக சாா்பு கப்பலொன்று தென் சீன கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, கடலுக்குள் மூழ்கியது. மிகக் கடுமையான சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து பகுதியிலிருந்து 3 போ் மீட்கப்பட்டனா். மற்ற 27 பயணிகளையும் மீட்புக் குழுவினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், அந்தக் கப்பல் எந்த நாட்டைச் சோ்ந்தது என்ற விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.