12.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஜப்பானில் கடந்த ஆண்டு முழுவதிலுமே மொத்தமாக வெறும் 10-க்கும் குறைவான துப்பாக்கிச் சூடு சம்பவங்களே நடந்துள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 4 பேர் காயமடைந்தனர் என ஜப்பான் நாட்டின் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 10 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 சம்பவங்கள் கும்பலாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் டோக்கியோவில் 61 துப்பாக்கிகள் கைப்பற்றபட்ட போதிலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் கூட அங்கு பதிவாகவில்லை. இந்நிலையில், இன்று இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரை பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வருகிற ஞாயிற்றுக் கிழமை ஜப்பானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவங்களை அதிகம் சந்திக்காத ஜப்பான் நாட்டு மக்கள் இன்றைய சம்பவத்தினை நினைத்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.