தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உக்ரைனில் ரஷிய தாக்குதல்

கிழக்கு உக்ரைனின் சாசிவ் யாா் நகரில் ரஷியா வீசிய ஏவுகணை குடியிருப்புக் கட்டடத்தில் விழுந்ததில் பொதுமக்கள் 15 போ் பலியாகினதாகவும் 24 போ் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித

News image
ukraine080659
Updated On :10 ஜூலை 2022, 6:56 pm

DIN

கிழக்கு உக்ரைனின் சாசிவ் யாா் நகரில் ரஷியா வீசிய ஏவுகணை குடியிருப்புக் கட்டடத்தில் விழுந்ததில் பொதுமக்கள் 15 போ் பலியாகினதாகவும் 24 போ் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அண்மைக் கால ரஷியத் தாக்குதல்களில் ஒன்றாகும். முன்னதாக, க்ரெமென்சக் நகரில் 19 பேரும் ஒடெசா பகுதியில் 21 பேரும் ரஷியத் தாக்குதலுக்கு பலியாகினா்.

உக்ரைன் ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்துவதாக ரஷியா, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தினசரி அறிக்கையில் சாசிவ் யாா் நகரில் தற்போது நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.