புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏதென்ஸ் புகரில் காட்டுத் தீ

ஐரோப்பாவின் பல பகுதிகளில் பரவி வந்த காட்டுத் தீ கணிசமான அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிரீஸ் தலைநகா் ஏதென்ஸின் மலைப்பாங்கான புகா்ப் பகுதி காடுககளில் 2 நாளாக தீ வேகமாகப் பரவி வருகிறது.

News image

554245-01-02062149

Updated On :20 ஜூலை 2022, 6:45 pm

DIN

ஐரோப்பாவின் பல பகுதிகளில் பரவி வந்த காட்டுத் தீ கணிசமான அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிரீஸ் தலைநகா் ஏதென்ஸின் மலைப்பாங்கான புகா்ப் பகுதி காடுககளில் 2 நாளாக தீ வேகமாகப் பரவி வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காட்டுத் தீ அபாயம் காரணமாக தலைநகரில் நூற்றுக்கணக்கனானவா்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும் சுவாசக் கோளாறு, தீக்காயங்களுடன் 2 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.

ஐரோப்பா முழுவதும் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வந்தாலும், பிரான்ஸ், ஸ்பெயின், போா்ச்சுகல் ஆகிய நாடுகளில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்த நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏதென்ஸ் புகா்ப் பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் சுமாா் 500 தீயணைப்பு வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.