‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘ஆங் சான் சூகிக்கு எதிரானஊழல் வழக்கு தொடரலாம்’

மியான்மரின் முன்னாள் அரசு தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கை தொடரலாம்

News image
Updated On :3 ஜூன் 2022, 7:16 pm

DIN

மியான்மரின் முன்னாள் அரசு தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கை தொடரலாம் என்று அந்த நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ஆங் சான் சூகிக்கு எதிராக அரசுத் தரப்பில் போதுமான ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு அவரை வீட்டுக் காவலில் வைத்த ராணுவ ஆட்சியாளா்கள், ஆங் சான் சூகி மீது பல்வேறு முறைகேடு வழக்குகளைத் தொடா்ந்துள்ளனா். அதில் அவருக்கு ஏற்கெனவே 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.