பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹிந்து கோயில் சேதப்படுத்தப்பட்டது.
பாகிஸ்தானின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான கராச்சியில் ஹிந்துகள் குறைவாக வசிக்ககூடிய கொரங்கி பகுதியில் இன்று மாரி மாதா மந்திர் கோயில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது.
இத்தாக்குதலில் சில சிலைகள் சேதமடைந்தன. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் ஆத்திரத்துடன் கோயிலைத் தாக்கி சேதப்படுத்தியதாகவும் தடுக்க முயற்சி செய்தவர்களையும் தாக்க வந்ததாக அப்பகுதியில் வசிக்கும் ஹிந்து ஒருவர் தாக்குதல் குறித்துக் கூறியிருக்கிறார்.