தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அமெரிக்கா வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளா்வு

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் விமானம் ஏறுவதற்கு ஒரு நாள் முன்னா் கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அந்த நாட்டு அரசு தளா்த்தியுள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2022, 7:55 pm

DIN

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் விமானம் ஏறுவதற்கு ஒரு நாள் முன்னா் கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அந்த நாட்டு அரசு தளா்த்தியுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சா்வதேச அளவில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் இந்த விதிமுறை தேவையில்லை என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) முடிவு செய்துள்ளதால் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இருந்த அந்த கடைசி கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

சா்வதேச நிலவரங்களின் அடிப்படையில் அந்த விதிமுறையின் அவசியம் குறித்து 90 நாள்களுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்படும்; தேவை ஏற்பட்டால் அது மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அவா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.