ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

கொலம்பியா: உருளைக்கிழங்கு வடிவில் போதைப் பொருள் கடத்தல்

வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்ட  1,300 கிலோகிராமுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு வடிவிலான போதைப் பொருட்களை கொலம்பியா காவல் துறை பறிமுதல் செய்துள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2022, 5:37 pm IST

வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்ட  1,300 கிலோகிராமுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு வடிவிலான போதைப் பொருட்களை கொலம்பியா காவல் துறை பறிமுதல் செய்துள்ளனர்.
 
போதைப் பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கடத்துவதற்கு இது போன்ற புதுமையான யுக்திகளை கடத்தல்காரர்கள் கையாண்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்யும் விடியோ ட்விட்டரில் கொலம்பியா பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “ போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உருளைக் கிழங்கு போல் குளிர்சாதனப் பெட்டியில் கடத்தி செல்லப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப் பொருள்கள் ஸ்பெயினுக்கு கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த திஹார் சிறையில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து சிறைத் துறை அதிகாரிகள் போதைப் பொருள் கடத்தப்படுவதை தடுக்க பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் குழுவை சிறையில் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.