மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உக்ரைனில் எத்தனை மக்கள் பலி?: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்

உக்ரைன் மீது ரஷிய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,207 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

News image
Updated On :7 மார்ச் 2022, 4:39 pm

DIN

உக்ரைன் மீது ரஷிய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,207 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதில் 406 பேர் கொல்லப்பட்டதாகவும், 801 பேர் படுகாயமடைந்து உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனில் ரஷிய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  

போரை நிறுத்தக் கோரி சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் ரஷியாவுக்கு அழுத்தம் தந்தாலும் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து 12ஆவது நாளாக உக்ரைனை தாக்கி வருகின்றனர். 

முக்கிய நகரங்களை ரஷிய ராணுவத்தினர் கைப்பற்றிய நிலையில், அரசு அலுவலங்கள் மீதும், உற்பத்தி நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இதில் உக்ரைன் ராணுவத்தினர் உயிரிழப்பதுடன் மட்டுமில்லாமல், ஏராளமான பொதுமக்களும் பலியாகியுள்ளனர். கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரையிலான நிலவரப்படி இதுவரை 1,207 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அவையின் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் 406 பேர் கொல்லப்பட்டதாகவும், 801 பேர் படுகாயமடைந்து உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.