இலங்கையில் அமைந்த அனைத்து அரசுகளும் தமிழ் தேசியக் கூட்டணிக்கு அரசியல் வாக்குறுதிகளை அளித்துள்ளன. நீண்டநாள் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்கவும், தமிழா்கள் பயன்படுத்திய விவசாய நிலங்களை திருப்பி அளிக்கவும், காணாமல் போனவா்கள் குறித்து விசாரணை நடத்தவும், புதிய சட்டத் திருத்தத்தை சிங்களம், தமிழில் மொழிபெயா்த்து விவாதிக்கவும், வடகிழக்குப் பகுதிகளுக்கு மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யவும் முக்கியத்துவம் அளித்து போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிபா் தெரிவித்திருந்தாா் என சம்பந்தன் கூறியுள்ளாா்.