இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தெருவிளக்குகளை அணைக்க முடிவு செய்திருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்,
இலங்கையில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு செலுத்த வேண்டிய அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற எரிபொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த நாட்டில் பெரும்பாலும் நீா்மின்சாரமே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது மழை குறைவாக பெய்ததால் நீா் மின்நிலையங்கல் முழுவீச்சில் செயல்படாமல் உள்ளன.
அனல் மின்சாரத்துக்குத் தேவையான எரிபொருள்களுக்கு இலங்கை இறக்குமதியையே நம்பியுள்ளது. இதனால், அனல் மின் நிலையங்களிலிருந்தும் போதிய அளவில் மின் உற்பத்தி செய்ய முடியவில்லை.
இதன் காரணமாக, நேற்று புதன்கிழமை முதல் நாடு முழுவதும் 10 மணி நேர மின்வெட்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
இதையும் படிக்க: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு அடுத்த பிரச்னை
இந்நிலையில், கையிருப்பில் இருக்கும் எரிபொருளை சேமிக்கும் பொருட்டும் மின் தடையைக் குறைப்பதற்கும் இரவு நேரங்களில் எரியும் தெருவிளக்குகளை அணைக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம் என மின்சாரத் துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது, இலங்கையில் 10 மணி நேர மின்வெட்டு 13 மணி நேரம் வரை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


